Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவில் இருந்து விலகுகிறாரா மதுசூதனன்?...

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (22:22 IST)
அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைந்ததாக கூறப்பட்டாலும் இன்னும் இரு அணிகளுக்கு இடையே புகைந்து கொண்டிருப்பதாகத்தான் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திடீரென துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களையும், அமைச்சர் வேலுமணியையும் சந்தித்து பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் நாளை மதுசூதனன் அவர்கள் முதலமைச்சர் பழனிச்சாமியை சந்திக்கவிருப்பதாகவும், அந்த சமயம் தான் அதிமுகவில் இருந்து விலகும் முடிவை முதல்வரிடம் தெரிவிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
சமீபத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த மீனவ கூட்டுறவு சங்க தேர்தலில் அமைச்சர் ஜெயகுமார் மற்றும் மதுசூதனன் ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்ற பிரச்சனைதான் மதுசூதனனின் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. நாளை மதுசூதனன் முதலமைச்சரை சந்தித்த பின் அவர் என்ன முடிவை எடுக்க போகிறார் என்பதை அறிய அதிமுக தொண்டர்கள் த்ரில்லுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments