Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவில் இருந்து விலகுகிறாரா மதுசூதனன்? அதிமுகவில் பரபரப்பு

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (22:17 IST)
அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைந்ததாக கூறப்பட்டாலும் இன்னும் இரு அணிகளுக்கு இடையே புகைந்து கொண்டிருப்பதாகத்தான் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திடீரென துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களையும், அமைச்சர் வேலுமணியையும் சந்தித்து பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் நாளை மதுசூதனன் அவர்கள் முதலமைச்சர் பழனிச்சாமியை சந்திக்கவிருப்பதாகவும், அந்த சமயம் தான் அதிமுகவில் இருந்து விலகும் முடிவை முதல்வரிடம் தெரிவிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
சமீபத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த மீனவ கூட்டுறவு சங்க தேர்தலில் அமைச்சர் ஜெயகுமார் மற்றும் மதுசூதனன் ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்ற பிரச்சனைதான் மதுசூதனனின் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. நாளை மதுசூதனன் முதலமைச்சரை சந்தித்த பின் அவர் என்ன முடிவை எடுக்க போகிறார் என்பதை அறிய அதிமுக தொண்டர்கள் த்ரில்லுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை ஜனாதிபதி ராஜினாமா விவகாரம்: இரு அவைகளும் அமளியால் ஒத்திவைப்பு..!

சென்னை விமான நிலையத்தில் முன் பதிவு டாக்சிகளுக்கு ஆன்லைன் வசதி: பயணிகளுக்கு பெரும் நிம்மதி!

ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.74000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

நடுரோட்டில் மின் கம்பங்கள்.. சொந்த காசை செலவு செய்து அகற்றிய எம்.எல்.ஏ..!

கேரளா விரைவில் முஸ்லிம் மாநிலமாக மாறக்கூடும்.. வெள்ளப்பள்ளி நடேசன் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments