அம்பேத்கர் பற்றி சர்ச்சை கருத்து: ஹர்திக் பாண்ட்யா கைது செய்யப்படுவாரா?

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (15:45 IST)
அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்கு பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 
 
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா (24). இவர், கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை ஒன்றை வெளியிட்டார், அதில் எந்த அம்பேத்கர் ஒரு குறுக்குத்தனமான அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவரா அல்லது இடஒதுக்கீடு எனும் நோயை நாடு முழுவதும் பரப்பியவரா என பதிவிட்டிருந்தார்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்த சம்பவம் தொடர்பாக டி. ஆர் மேவால் என்பவர் ஹர்திக் பாண்ட்யா கருத்து அம்பேத்கரை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக கூறி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.
 
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம்,  ஹர்திக் பாண்டியா மீது வழக்கு பதிவு செய்து போலீசாரை விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments