Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியை மாட்டுக்கு போடப்படும் ஊசியால் குத்திய ஆசிரியர்!

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (15:34 IST)
திருச்சியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவியை  மாட்டுக்கு போடப்படும் ஊசியால் குத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 
திருச்சி மாவட்டதில் உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒரு அரசு பள்ளியில், தீனா மேரி என்ற மாணவி 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்றாள்.
 
அப்போது தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ பாடம் நடத்தி கொண்டிருந்தார், அதனை கவனிக்காமல் அந்த மாணவி சக மாணவியுடன் மாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் ஊசியை வைத்து விளையாடி கொண்டிருந்தாள். இதனால் கோபமடைந்த ஆசிரியர் அந்த ஊசியை மாணவிக்கு போட்டுள்ளார். இதனால் மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ மீது மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து போலீசார் ஆசிரியரை விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments