Publish Date: Mon, 03 Sep 2018 (16:42 IST)
Updated Date: Mon, 03 Sep 2018 (16:52 IST)
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. நேற்று எலிமினேஷனில் டேனியல் வெளியேற்றப்பட்டார்.
இதனால் திங்கட்கிழமையான இன்று நாமினேசன் செய்வது குறித்து வித்தியாசமான நிகழ்வுகள் நடந்தன. விக்ரம் வேதா படத்தில் வரும் காட்சியில் போல் நாமினேட் ஆனவர்களுடன் ஒவ்வொருவரும் தனியாக பேசுகின்றனர்.
இதில், விஜயலட்சுமி ஐஸ்வர்யாவிடம் தமிழ் மக்கள் முட்டாள் இல்லை என்று கூறுகிறார். இதனால் அவர் அழுகிறார். மற்றொரு ப்ரோமோவில் ஐஸ்வர்யாவிடம் நாமினேஷனுக்கு பயப்படுவது ஏன் என ரித்விகா கேட்டுள்ளார். மேலும் ஒருவாட்டி மக்களுடன் விளையாடி பார்ப்போமா என்று கூறுகிறார்.
ஒருவேளை ஐஸ்வர்யா இந்த வாரம் நாமினேஷனில் வந்தால் தப்பிப்பது கடினம் என்கிறார்கள். ஏனெனில் ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் ஆரம்பம் முதலே விமர்சிக்கப்பட்டு வருகின்றன.