Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்கர் மேடை சர்ச்சை… இந்தியாவில் வில் ஸ்மித் - இதுதான் காரணமா?

ஆஸ்கர் மேடை சர்ச்சை… இந்தியாவில் வில் ஸ்மித் -  இதுதான் காரணமா?
, திங்கள், 25 ஏப்ரல் 2022 (09:39 IST)
ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சமீபத்தில் ஆஸ்கர் மேடையில் தொகுப்பாளரை அறைந்து சர்ச்சையில் சிக்கினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்கர் விருது விழா நடைபெற்றபோது தனது மனைவி குறித்து அவமரியாதையாக பேசியதாக தொகுப்பாளர் கிரிஸ் ராக் என்பவரை நடிகர் வில் ஸ்மித் மேடையில் பளார் என கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும், அதன்பின் தனது செயலுக்கு வில்ஸ்மித் வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மற்றும் மற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகடமி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையடுத்து வில் ஸ்மித் சில படங்களின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அமைதியைத் தேடி ஆன்மிக பயணமாக வில் ஸ்மித் இந்தியா வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு அவர் வாரனாசி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வழிபட உள்ளதாக சொல்லப்படுகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் 66 படத்தில் இணைந்த மற்றொரு நடிகர்? வெளியான தகவல்!