Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வருத்தப் படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 வேணாம் என சொல்லும் சிவகார்த்திகேயன்! ஏன் தெரியுமா?

வருத்தப் படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 வேணாம் என சொல்லும் சிவகார்த்திகேயன்! ஏன் தெரியுமா?
, வெள்ளி, 8 அக்டோபர் 2021 (15:16 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் வேண்டாம் என கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயனின் சந்தை மதிப்பை நிலைநாட்டிய படங்களில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்துக்கு முதன்மையான இடம் உண்டு. அதன் பின்னர் அவரை வைத்து ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய படங்களை இயக்கினார். இப்போது எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் தனது முதல் படமான  ஹரிகுமார் நடித்த திருத்தம் என்ற படத்தில் நிகழ்ந்த தவறு பற்றி கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்கானலில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு ‘அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவே கூடாது. ஏனென்றால் அது ஒரு எபிக் படம். எங்களுக்கே தெரியாமல் நாங்கள் ஜாலியாக எடுத்த படம். அதை திரும்ப எடுக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் இப்படி சொல்வதற்கு மறைமுக காரணம் ஒன்றும் இருக்கிறதாம். அது என்னவென்றால் சீமராஜா படத்துக்குப் பின்னர் மீண்டும் பொன்ராமோடு இணைய வேண்டாம் என அவர் விரும்புகிறாராம். அதனால்தான் இப்படி வேறு காரணங்களை சொல்லி தட்டிக் கழிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நமிதாவின் கதையை எடிட் செய்யாமல் ஒளிபரப்பிய விஜய் டிவி: குவியும் பாராட்டுகள்