Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரைநாள் தான் போராட்டமா? நடிகர் சங்கத்தின் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் கண்டனம்

Advertiesment
நடிகர் சங்கம்
, புதன், 4 ஏப்ரல் 2018 (10:33 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடி அந்த பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வலியுறுத்தியும் நடிகர் சங்கம் வரும் 8ஆம் தேதி அறப்போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.

ஆனால் இந்த போராட்டம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முடிவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சைக்கு ஒரு முழு நாள் போராடாமல் அரை நாள் மட்டும் போராடுவது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் சங்கம், 'நடிகர் சங்கத்தின் கண்டன அறவழி போராட்டம் நடத்த 8.4.18 ஞாயிறு அன்று காலை 9மணி முதல் 6மணி தான் போலீஸ் அனுமதி கோரப்பட்டது. ஆனால் காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை தான் போலீஸ் அனுமதி கிடைக்க பெற்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிஎஸ்கே போட்டியை பார்க்க யாரும் போகாதீங்க: பிரபல இசையமைப்பாளர் வேண்டுகோள்