Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்குக் கேப்டன் மகன் என்கிற பெருமை போதும்… மேடையில் கண்ணீர் விட்ட விஜய பிரபாகரன்!

Advertiesment
விஜயகாந்த்

vinoth

, சனி, 9 ஆகஸ்ட் 2025 (10:02 IST)
தமிழ் சினிமா ஆக்‌ஷன் படப் பிரியர்களுக்கு திகட்ட திகட்ட விருந்து வைத்தவர் விஜயகாந்த். 80 களிலும் 90 களிலும் வெளியான அவரின் ஆக்‌ஷன் படங்கள் இன்றளவும் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி ஆகியவற்றில் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன.

அப்படி விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்த படம்தான் அவரின் நூறாவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’. 1992 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அதுவரையிலான அவரின் வெற்றிகளை எல்லாம் தகர்த்தெறிந்து புதிய பென்ச்மார்க்கை உருவாக்கியது. ஆர் கே செல்வமணி இயக்கத்தில், விஜயகாந்த், சரத்குமார் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்நிலையில் படம் வெளியாகி 33 ஆண்டுகள் கழித்து மறைந்த விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மீண்டும் ரிலீஸாகிறது. இதையடுத்து படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர் “வேறு எந்த படமாக இருந்தாலும் நான் வந்திருக்க மாட்டேன். ஆனால் கேப்டன் பிரபாகரன் படத்தின் நிகழ்ச்சிக்கு இந்த பிரபாகரன் கண்டிப்பாக வருவேன். ஏனென்றால் சின்ன வயதில் இருந்தே என்னை எல்லோரும் பிரபாகரன் பிரபாகரன் எனக் கூப்பிடும்போது இந்த படம்தான்  ஞாபகம் வரும். அப்பா இறந்து ஒரு வருஷம் ஆகிவிட்டது, இன்னும் அழுதுகொண்டிருக்கிறான் என சிலர் கிண்டல் செய்கிறார்கள்.

நான் தோல்விகளை நினைத்து அழவில்லை. என் அப்பாவை நான் மிஸ் பண்றேன், அதனால் நான் அழுகிறேன். எனக்கு எம் பி பதவியெல்லாம் பெரிதில்லை. கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் என்பதே கடைசி வரை போதும்” என பேசும்போதே கட்டுப்பாட்டை இழந்து அழத் தொடங்கிவிட்டார். பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த படக்குழுவினர் அவரை ஆறுதல் படுத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவர்கள்தான் எனது தூண்கள்.. எனது வெற்றிகளில் பங்கு – லோகேஷ் பகிர்ந்த உணர்ச்சிப்பூர்வ பதிவு!