Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘என் கேரியரே முடிந்துவிட்டது என்றார்கள்’.. விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி !

Advertiesment
‘என் கேரியரே முடிந்துவிட்டது என்றார்கள்’.. விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி !

vinoth

, திங்கள், 24 மார்ச் 2025 (14:26 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த காலங்களில் விஜய் சேதுபதியின் எந்த படமும் தொடாத வசூல் சாதனையை மகாராஜா செய்துள்ளது.

இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பல நாடுகளில் நம்பர் 1 இடத்தில் ட்ரண்டிங்கில் இருந்தது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகமாகப் பார்க்கப்பட்ட இந்தியப் படங்களின் வரிசையில் முதலிடத்துக்கு சென்றது. நெட்பிளிக்ஸில் இந்த படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் லாபத்தை ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில்  விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி, “ இந்த படத்துக்கு முன்பு என் கேரியரே முடிந்துவிட்டது என்றார்கள். ஆனால் மகாராஜா வந்து என்னை மகாராஜா ஆக்கியது. இந்த அளவுக்கு சீனா உள்ளிட்ட நாடுகளில் கூட இந்த படம் ரசிகர்களைக் கவரும் என நான் நினைக்கவில்லை” எனக் கூறியுள்ளார். மகாராஜா படத்துக்கு முன்பாக கடந்த சில ஆண்டுகளாக விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த எந்த படமும் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிநாட்டு திரைப்பட விழாக்களுக்கு செல்ல பேட் கேர்ள் படத்துக்குக் கிடைத்திருக்கும் சலுகை…!