Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே ஒரு வில்லன் கதாபாத்திரத்துக்கே இப்படியா?.. அலறியடித்து ஓடும் சிங்கம்புலி!

Advertiesment
ஒரே ஒரு வில்லன் கதாபாத்திரத்துக்கே இப்படியா?.. அலறியடித்து ஓடும் சிங்கம்புலி!

vinoth

, திங்கள், 24 மார்ச் 2025 (07:37 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா கடந்த ஆண்டு வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று சூப்பர் ஹிட் படமானது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஆனால் அவர்களை எல்லாம் தாண்டி ஸ்கோர் செய்தது என்றால் அது நகைச்சுவை நடிகர் சிங்கம் புலிதான்.

இதுவரை நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட சிங்கம்புலி இந்த படத்தில் ஒரு பாலியல் வல்லுறவாளனாக நடித்து ரசிகர்களை திடுக்கிட வைத்துள்ளார். படத்தில் அவர் ஒரு சிறுமியை வல்லுறவு செய்யும் காட்சிகள் அவர் மீது கோபம் வரவழைக்கும் விதமாக உள்ளன. இந்நிலையில் இந்த படத்தால் தன்னுடைய இமேஜ் எப்படி மாறியுள்ளது என்பது பற்றி சிங்கம்புலி பேசியுள்ளார்.

அதில் “இதுவரை என்னை எல்லோரும் நகைச்சுவை நடிகராக அறிந்து வைத்திருந்தார்கள். அதனால் பார்த்தவுடன் சிரிப்பார்கள். ஆனால் மகாராஜா படத்துக்குப் பிறகு என்னை பார்த்தால் பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் இனிமேல் வில்லன் வேடங்களில் நடிக்கப் போவதில்லை. அதுமட்டுமில்லாமல் குழந்தைகளுக்கான 3டி படம் ஒன்றையும் விரைவில் இயக்கப் போகிறேன்” என அறிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!