Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உன் மீதான மரியாதை ஆயிரம் மடங்கு பெருகுகிறது… மாரி செல்வராஜைப் பாராட்டிய விக்னேஷ் சிவன்!

Advertiesment
உன் மீதான மரியாதை ஆயிரம் மடங்கு பெருகுகிறது… மாரி செல்வராஜைப் பாராட்டிய விக்னேஷ் சிவன்!

vinoth

, புதன், 21 ஆகஸ்ட் 2024 (10:36 IST)
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார். படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸாகிறது.

சமீபத்தில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பலர் இந்த படத்தைப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தைப் பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார்.

அதில் “உன் வாழ்க்கையின் நல்ல பக்கங்களைப் பற்றி மட்டுமே படித்துவிட்டு, உன் படைப்புகளைப் பார்க்கத் தொடங்கினேன். பிரமிப்பாக இருந்தது. இப்போது வாழையில் உன் இருண்ட பக்கங்களையும் பார்த்த பிறகு, உன் மீதான மரியாதை ஆயிரம் மடங்கு அதிகமாகிறது. இனி உன் படைப்புகள் மீதான மரியாதையும் அவ்வாறே கூடும்.

வாழையடி வாழையாய் உன் தலைமுறையே சிறக்கும். சிறப்புக் காட்சிக்கு அழைத்தாய். திரைப் பார்த்து சிலிர்த்தேன். மீண்டும் பார்க்கும் ஆவலோடு ஆகஸ்ட் 23க்காக காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சல்மான் கான் பட ஷூட்டிங்கில் ஏ ஆர் முருகதாஸ்!