Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனக்குப் பிடித்த இயக்குனர்… என் படத்தைப் பார்த்தேன்னு கூட சொல்ல மாட்டாரு- பா ரஞ்சித் சொன்ன அந்த நபர் யார்?

எனக்குப் பிடித்த இயக்குனர்… என் படத்தைப் பார்த்தேன்னு கூட சொல்ல மாட்டாரு- பா ரஞ்சித் சொன்ன அந்த நபர் யார்?

vinoth

, செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (13:20 IST)
பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எழுத்தாளரான மாரிசெல்வராஜ், அந்த படத்தின் வெற்றியை  அதன்பின்னர் தனுஷ் நடித்த கர்ணன், உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு மாமன்னன் திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற தன்னுடைய அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக மாரி செல்வராஜே இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம், மாரி செல்வராஜ் தான் சிறுவயதில் எதிர்கொண்ட ஒரு சம்பவத்தை அடிப்படையாக உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பா ரஞ்சித் “எனக்கு பிடித்த இயக்குனர் ஒருத்தர் இருக்காரு. அவர் என் படத்த பாத்திருக்காரு. ஆனா அவர் என் படத்தைப் பாத்துட்டேன்னு கூட என்னிடம் சொல்ல மாட்டாரு. ஆனா அவர கூட்டிட்டு வந்து வாழை திரைப்படத்தைப் போட்டு காட்டி அதைப் பத்தி பேச வச்சிட்டாரு” எனப் பேசியுள்ளார். இதையடுத்து அந்த இயக்குனர் யார் என்பது குறித்து சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விவாதம் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏன் மாமன்னன், கர்ணன் பிடிக்கவில்லை தெரியுமா?... வாழை விழாவில் பா ரஞ்சித் பேச்சு!