Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏன் மாமன்னன், கர்ணன் பிடிக்கவில்லை தெரியுமா?... வாழை விழாவில் பா ரஞ்சித் பேச்சு!

ஏன் மாமன்னன், கர்ணன் பிடிக்கவில்லை தெரியுமா?... வாழை விழாவில் பா ரஞ்சித் பேச்சு!

vinoth

, செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (09:51 IST)
பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எழுத்தாளரான மாரிசெல்வராஜ், அந்த படத்தின் வெற்றியை  அதன்பின்னர் தனுஷ் நடித்த கர்ணன், உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு மாமன்னன் திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற தன்னுடைய அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக மாரி செல்வராஜே இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம், மாரி செல்வராஜ் தான் சிறுவயதில் எதிர்கொண்ட ஒரு சம்பவத்தை அடிப்படையாக உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

அதில் இயக்குனர் பா ரஞ்சித் கலந்துகொண்டு பேசினார். அப்போது “ரசிகர்களுக்கு மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ பிடித்தது. ஏனென்றால் அந்த படத்தின் கதாநாயகன் திருப்பி அடிக்கவில்லை. ஆனால் மாமன்னன் மற்றும் கர்ணன் ஆகிய படங்களின் கதாநாயகன்கள் திருப்பி அடிப்பதால் அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தியின் ‘மெய்யழகன்’ பட ஆடியோ ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!