Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேஜிஎஃப், பாகுபலி ஸ்டைலில் இரண்டு பாகங்களாக விடுதலை…. அதிகாரப் பூர்வமாக அறிவித்த படக்குழு!

கேஜிஎஃப், பாகுபலி ஸ்டைலில் இரண்டு பாகங்களாக விடுதலை…. அதிகாரப் பூர்வமாக அறிவித்த படக்குழு!
, ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (16:49 IST)
கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட விடுதலை இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர்.

ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்தது. சமீபத்தில் கடைசி கட்ட ஷூட்டிங் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதிகளில் நடந்தது. அதோடு மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வெற்றிமாறன் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இந்த அதிகாரப்பூர்வமற்ற தகவலை இப்போது படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

இன்று இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லைகர் தோல்வியால் சம்பளத்தை விட்டுக்கொடுக்கும் விஜய் தேவரகொண்டா!