Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் சூர்யா & விக்ரம்… வேள்பாரி பற்றி பரவும் தகவல்!

Advertiesment
20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் சூர்யா & விக்ரம்… வேள்பாரி பற்றி பரவும் தகவல்!

vinoth

, வியாழன், 26 செப்டம்பர் 2024 (07:50 IST)
இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கதையை அவர் 1000 கோடி ரூபாயில் மூன்று பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளதாகவும், அதில் பாலிவுட் ஹீரோ ரண்வீர் சிங் அல்லது யாஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது சூர்யா வேள்பாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விக்ரம்மும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக இப்போது தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே சூர்யா மற்றும் விக்ரம் பாலா இயக்கத்தில் ‘பிதாமகன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாழை படத்தின் ஓடிடி ரிலீஸில் நடந்த மாற்றம்… புது தேதியை அறிவித்த ஹாட்ஸ்டார்!