Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல தடங்கல்களுக்குப் பிறகு ரிலீஸான ‘வீர தீர சூரன்’… ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்!

Advertiesment
பல தடங்கல்களுக்குப் பிறகு ரிலீஸான ‘வீர தீர சூரன்’… ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்!

vinoth

, வெள்ளி, 28 மார்ச் 2025 (08:33 IST)
விக்ரம் நடிப்பில் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் நேற்று ரிலீஸாக இருந்த நிலையில் படம் சம்மந்தமான ஒரு வழக்கால் ரிலீஸுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த படத்தில் முதலீடு செய்திருந்த IVY என்ற நிறுவனத்துக்கு அவர் டிஜிட்டல் உரிமையைக் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்

ஆனால் அந்நிறுவனம் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்வதற்குள்ளாகவே ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அறிவித்துவிட்டதாகவும் அதனால் தங்களால் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்ய முடியவில்லை என்றும் அந்நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால தடையை நேற்று அறிவித்தது. அதன் பின்னர் அவருக்கு சேரவேண்டிய தொகையைக் கொடுத்த பின்னர் படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் தடையெதுவும் இல்லை என அறிவிக்க, மாலை 6 மணிக் காட்சிகள் திரையிடப்பட்டன.

இப்படிப் பல தடைகளுக்குப் பின்னர் ரிலீஸான வீர தீர சூரன் படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற தொடங்கியுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு விக்ரம்முக்கு ஒரு கமர்ஷியலான படமாக ‘வீர தீர சூரன்’ அமையும் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்னை இல்லம் எனக்கு சொந்தமான வீடு – ஜப்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பிரபு!