Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கானக் குரல் காற்றோடு கலந்திருக்கும்…. எஸ் பி பி மறைவுக்கு வைகோ இரங்கல்!

Advertiesment
எஸ்பிபி
, வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (16:24 IST)
மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்துக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில் ‘ தன் கானக் குரலால் கோடானு கோடி இதயங்களை ஈர்த்தவரும், 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணத்தோடு நீண்ட நெடிய போராட்டம் நடத்தி, மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதை உலுக்குகிறது.
உயிர் ஓய்ந்து உடலால் அவர் மறைந்தாலும், யாழ் மீட்டுவது போன்ற அவரது கானக் குரல் இன்னும் எவ்வளவு காலமானாலும் காற்றோடு கலந்திருக்கும். 

கேட்போரைக் காந்தமெனக் கவர்ந்திழுக்கும். திரைப்பட இசை உலகில் அழியாப் புகழோடு நிரந்தரமாக வாழ்வார். அந்தப் பாடல் இசை மேதையை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், கணக்கற்ற அவரது ரசிகர்களுக்கும், அவரை உயிராய் நேசித்த கலை உலகப் பெருமக்களுக்கும் என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பண்ணை வீட்டில் நாளை நல்லடக்கம் செய்யப்படும் எஸ் பி பி உடல்!