Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏழு தலைமுறைக்கும் ’’அன்னைய்யா ‘’புகழ் வாழும் – எஸ்.பி.பியின் நீண்டகால நண்பர் கமல் டுவீட்

ஏழு தலைமுறைக்கும் ’’அன்னைய்யா ‘’புகழ் வாழும் –  எஸ்.பி.பியின் நீண்டகால நண்பர் கமல் டுவீட்
, வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (16:00 IST)
இந்தியத் திரையுலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் தன் காந்தர்வக் குரலால் ஐம்பது வருட காலம் தனி சாம்ராஜ்யமே நடத்திவந்து,அனைத்து மக்களின் காதுகளையும் குளிர்வித்து, இதயத்தை இதயமாக்கிய எஸ்.பி.பி இன்று நண்பகலில் காலமானார்.

தமிழ் சினிமாவிலிருந்து  தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்படும் சினிமாக்களுகு கமல்ஹாசன் குரலாக ஒலித்தது எஸ்.பி.பிதான். அப்படியொரு ஒற்றுமை இருவருக்கும்.

ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள பாசம் எத்தனை அந்நியோன்யம் என்பது கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவரது காலில் கமல்ஹாசன் ஆசீர்வாதம் பெறுவார்.

ஒருமுறை எஸ்.பி.பி, கமல்ஹாசனின் பாடும் திறத்தைப் பற்றிக் கூறும்போது, ‘’கமல்ஹாசன் உச்சஸ்ய்தாயியில் பாடும்போது, நெற்றியில் நரம்புகள் புடைந்திருக்கும்…’’ என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

எஸ்.பி.பியின் மறைவு குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’யாருக்கும் இல்லாத சிறப்பு எஸ்.பி.பிக்கு மட்டுமே உண்டு ’’– வீடியோ வெளி்யிட்டு…ரஜினி உருக்கம்