Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்புவின் தாயார் வெளிநடப்பு… பேச்சுவார்த்தையில் முடிவின்மை!

சிம்புவின் தாயார் வெளிநடப்பு… பேச்சுவார்த்தையில் முடிவின்மை!
, திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (10:06 IST)
நடிகர் சிம்பு சில தயாரிப்பாளர்களிடம் வாங்கிய முன்பணம் கொடுக்க வேண்டியதற்காக அவர் படங்களுக்கு தடை விதிக்கும் சூழல் உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபு  இயக்கத்தில் மாநாடு படத்திலும், கெளதம் இயக்கும்  வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சில ஆண்டுகளுக்கு முன் நடித்த  அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததாகத் தெரிகிறது. இப்படத்தின் விவரகாரம் குறித்து சென்னை அண்ணாசாலை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து,  நடிகர் சிம்புவின் தயார் உஷா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நடிகர் சிம்புவின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படங்களைத் தடை செய்ய முயற்சிக்கிறார்கள்….எங்களைக் கட்டப்பாஞ்சாயத்திற்கு அழைக்கிறார்கள் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்த போது சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கலந்துகொண்டார். ஆனால் பேச்சுவார்த்தையின் இடையிலேயே அவர் எழுந்து சென்றுவிட்டதாகவும், சுமூகமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சார்பட்டா தியேட்டருக்கு வராது… பேச்சுவார்த்தை தோல்வி!