Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசியல் பிசியால் சினிமாவை மறந்த உதயநிதி… ஷூட்டிங் எப்போ எனக் காத்திருக்கும் இயக்குனர்கள்!

அரசியல் பிசியால் சினிமாவை மறந்த உதயநிதி… ஷூட்டிங் எப்போ எனக் காத்திருக்கும் இயக்குனர்கள்!
, வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (19:27 IST)
திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி நடிப்பில் இரண்டு படங்கள் உருவாக இருந்த நிலையில் இப்போது தேர்தல் பிஸியில் இருக்கிறார்.

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய தடம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் அவர் மீதான கவனம் மற்ற ஹீரோக்களும் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் போன்ற பெரிய ஹீரோக்களே அவரிடம் கதைக் கேட்டுள்ளனர். ஆனால் உதயநிதி ஸ்டாலினிடம் ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கிவிட்டதால் மகிழ்திருமேனியால் விஜய் படத்தை இயக்க முடியவில்லை.

ஆனால் உதயநிதி நடிக்க இருந்த படமும் இன்னமும் தொடங்கவில்லை. அதற்குக் காரணம் இப்போது உதயநிதி தேர்தல் பிஸியில் இருப்பதுதான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் எனக் காத்திருக்கும் மகிழ் திருமேனிக்கு ஆறுதலான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி மகிழ்திருமேனி படத்துக்கு மாதத்துக்கு 15 நாட்கள் தேதிகள் ஒதுக்க உள்ளாராம் உதய், மீதமிருக்கும் 15 நாட்கள் அரசியல் வேலைகளுக்கு எனப் பிரித்துள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதியின் தெலுங்கு படம் இந்த தமிழ் படத்தின் காப்பியா?