Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

19 வருடங்களுக்குப் பிறகு இணையும் சூர்யா-த்ரிஷா கூட்டணி!

Advertiesment
Suriya 45

vinoth

, புதன், 20 நவம்பர் 2024 (14:33 IST)
கங்குவா மற்றும் சூர்யா 44 ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மிகக் குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதையை சூர்யாவிடம் சொல்லி சம்மதம் வாங்கியது குறித்து ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. அதில் “நான் இந்த கதையை சூர்யா சாரிடம் ஒரு மணிநேரம் சொன்னேன். கேட்டு முடித்ததும் அவர் உடனே நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்றார். அவர் கடந்த 16 ஆண்டுகளாக எந்த கதையையும் இப்படிக் கேட்டதும் ஓகே சொன்னதில்லையாம். இதை அவரே என்னிடம் சொல்லி இந்த கதையை ஓகே செய்தார்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாய்கியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘மௌனம் பேசியதே’ மற்றும் ‘ஆறு’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 19 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா 44 படத்தில் இணைந்த இன்னொரு நடிகை… அவரே கொடுத்த அப்டேட்!