Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 புதுப்படங்கள் ரிலீஸ் ஆனபோதிலும் காத்துவாங்கும் திரையரங்குகள்!

4 புதுப்படங்கள் ரிலீஸ் ஆனபோதிலும் காத்துவாங்கும் திரையரங்குகள்!
, வியாழன், 13 ஜனவரி 2022 (18:20 IST)
இன்று நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆன போதிலும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் காற்று வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சதீஷ் நடித்த நாய் சேகர், அஸ்வின் நடித்த என்ன சொல்ல போகிறாய், சசிகுமார் நடித்த கொம்பு வச்ச சிங்கம் மற்றும் விதார்த் நடித்த கார்பன் ஆகிய நான்கு திரைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன, நாளையும் நான்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள நான்கு திரைப்படங்களுக்கும் திரையரங்குகளில் கூட்டம் இல்லை என்றும் ஒரு சில திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது 
 
பெரும்பாலான திரையரங்குகளில் 10 முதல் 50 பார்வையாளர்கள் மட்டுமே இருந்ததாகவும் தெரிகிறது பொங்கல் விடுமுறை காரணமாக வெளியூருக்குப் செல்ல வேண்டி இருப்பதால் கூட்டம் குறைவாக இருக்கலாம் என்றும் நாளை முதல் கூட்டம் அதிகமாக வர வாய்ப்பு உள்ளதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் கருத்து கூறி வருகின்றனர் 
 
இருப்பினும் ’வலிமை’ ரிலீஸ் ஆகியிருந்தால் திரையரங்குகளுக்கு இந்த நிலைமை இருந்திருக்குமா என்று கேள்வியை அஜித் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமண வயது 21ஆக மாற்றம்: நடிகை ஓவியா டுவிட்