Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமா தயாரிப்பாளார் என்னை மிரட்டினார்...5 ஆண்டுகள் மன உளைச்சல் -நடிகர் சூரி

சினிமா தயாரிப்பாளார் என்னை மிரட்டினார்...5 ஆண்டுகள் மன உளைச்சல்  -நடிகர் சூரி
, சனி, 10 அக்டோபர் 2020 (18:54 IST)
நடிகர் சூரி, தயாரிப்பாளார் அன்புராஜன் தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும் தான் கடுமையான மனவுளைச்சலில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

நடிகர் சூரி தன்னிடம் ரூபாய் 2.7 கோடி மோசடி செய்ததாக இருவர் மீது காவல்துறையினர்களிடம் புகார் அளித்திருந்தார் என்பதும், இதில் ஒருவர் நடிகர் விஷ்ணுவிஷாலின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சற்று முன்னர் நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டரில் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் நில மோசடி தொடர்பாக புகார் அளித்த நடிகர் சூரியை அக்டோபர் 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில்

50 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி நடந்தது என்றால் அந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்று விடும் என்பதும் அந்த வகையில் சூரியிடம் மோசடி செய்த தொகை 2.7 கோடி என்பதால் இந்த வழக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்று உள்ளது என்பதும் அதனால் தான் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சூரிக்கு சம்மன் அனுப்பி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மழலை சிரிப்பில் இணையத்தை ஈர்க்கும் ஐலா குட்டி!