ராஜ் & டி.கே. கூட்டணியின் 'தி ஃபேமிலி மேன்' தொடரின் மூன்றாவது சீசன், அரசியல், குடும்ப போராட்டம் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றை மீண்டும் திறம்பட கலந்து வழங்குகிறது. மனோஜ் பாஜ்பாய் தொடரின் முக்கிய கேரக்டரை ஏற்றுள்ளார்.
3வது சீசன் நாகாலாந்தில் தொடங்கி, வடகிழக்கு மாநிலங்களின் சமூக-அரசியல் சிக்கல்களை ஆழமாக ஆராய்கிறது. கலகம் மற்றும் எல்லை தாண்டிய ரகசிய நடவடிக்கைகள் மூலம் எழும் புதிய தேசிய பாதுகாப்புக் கவலைகளை தொடர் கையாளுகிறது.
ஸ்ரீகாந்தின் உளவு வாழ்க்கை இப்போது குடும்பத்திற்கு தெரிந்தாலும், மனைவி சுசித்ராவுடனான உறவு இன்னும் சிக்கலாகவே உள்ளது. அவரது தனித்தன்மை வாய்ந்த நகைச்சுவை குடும்பகாட்சிகளில் பிரகாசிக்கிறது.
ஸ்ரீகாந்த் இப்போது என்.ஐ.ஏ.வால் தேடப்படுகிறார். அவருக்கு எதிராக ஜெய்தீப் அஹ்லாவத் இரக்கமற்ற எதிரியாக களமிறக்கப்பட்டுள்ளார். ஷாரிப் ஹாஷ்மியின் ஜே.கே. தனது நகைச்சுவையால் தொடருக்கு விறுவிறுப்பை வழங்குகிறார். இரண்டாவது சீசனில் இருந்த சமந்தா, இந்த சீசனில் இல்லாதது ஒரு குறையே..
மொத்தம் ஏழு எபிசோடுகளை கொண்ட இந்த சீசன், சில இடங்களில் சற்றே மெதுவாக சென்றாலும், பல கேள்விகளை எழுப்பி நான்காவது சீசனுக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. மனோஜ் பாஜ்பாயின் இயல்பான நடிப்புடன், இந்த சீசன் அதன் மைய உணர்வை இழக்காமல் பரபரப்பாக நகர்கிறது.