Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கும் அந்த ஆசை துளிர்விட்டுள்ளது… மருதநாயகம் குறித்துக் கமல் பாசிட்டிவ் அப்டேட்!

Advertiesment
கமல்

vinoth

, வெள்ளி, 21 நவம்பர் 2025 (08:17 IST)
கமல்ஹாசனின் கனவுப்படைப்பான மருதநாயகம் படம் 1995 ஆம் ஆண்டு தொடங்க பட்டு பட்ஜெட் காரணமாக பாதியிலேயே நிறுத்தப் பட்டது. மருதநாயகம் கமலின் கனவுப் படங்களில் ஒன்று. இந்த படத்துக்காக இங்கிலாந்து மகாராணியை எல்லாம் வரவைத்து படபூஜை நிகழ்த்தினார் கமல். 30 நிமிடங்கள் வரை ஓடும் காட்சிகளையும் எடுத்து முடித்து ஒரு பாடலையும் ரிலீஸ் செய்தார். ஆனால் அதன் பின் பொருளாதார காரணங்களால் இந்த படம் நிறுத்தப்பட்டது.

அந்த படம் நிறுத்தப்பட்டதே அதன் மீதான் எதிர்பார்ப்பு அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிட்டது. இதனால் பலரும் மருதநாயகம் மீண்டும் வருமா, கமல் அந்த படத்தை வேறு ஒரு நடிகரை வைத்து இயக்குவாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வந்தனர்.

சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ‘வாரனாசி’ திரைப்படத்தின் அறிமுக வீடியோவில் மகேஷ் பாபு காளை மாட்டின் மேல் சவாரி செய்வது போன்ற காட்சிகள் வெளியாகின. இதை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கமல் தன்னுடைய ‘மருதநாயகம்’ படத்தில் செய்துவிட்டார் எனக் கருத்துகள் எழுந்தன. இந்நிலையில் மருதநாயகம் மீண்டும் தொடங்கப்படுமா என்ற கேள்விக்கு கமல் பாசிட்டிவ்வாக பேசியுள்ளார். அதில் “எனக்கு மீண்டும் அந்த ஆசை வந்துள்ளது. இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட சூழலில் மருதநாயகத்தை மீண்டும் எடுப்பது சாத்தியமானதுதான்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லை மீறிய ‘கோட்’ பட இயக்குனர்.. திவ்யபாரதி பகீர் குற்றச்சாட்டு..