Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யாவின் தேசியவிருது பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாமல் மழுப்பினாரா சந்தானம்?

சூர்யாவின் தேசியவிருது பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாமல் மழுப்பினாரா சந்தானம்?
, புதன், 27 ஜூலை 2022 (16:05 IST)
நடிகர் சூர்யாவுக்கு சூரரைப் போற்று திரைப்படத்துக்காக சமீபத்தில் தேசிய விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து தமிழ் சினிமா உலகினர் அனைவரும் சூர்யாவுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த குலுகுலு படத்தின் நிகழ்வுக்கு வந்த நடிகர் சந்தானத்திடம் பத்திரிக்கையாளர்கள் இது சம்மந்தமாக கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அவர்களிடம் “இந்த படம் சம்மந்தமான கேள்விகள் இருந்தால் கேளுங்கள்” என சொல்லி மழுப்பிவிட்டாராம் சந்தானம்.

ஜெய்பீம் படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பிய போது சந்தானம் அந்த படம் பற்றி பேசியபோது “ஒரு சமூகத்தைத் தாழ்த்தி பேசி படம் எடுக்காதீர்கள்” என்று கூறியது சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. இதனால் சூர்யாவுக்கும் சந்தானத்துக்கும் இடையே ஒரு சிறிய மோதல் நிலவுவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் ஜெயிலர் பட ஷூட்டிங் தள்ளிப்போகிறதா?