Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மம்மூட்டியோடு கைகோர்க்கும் சூர்யா.. விரைவில் வரப்போகும் சூப்பர் அப்டேட்!

Advertiesment
மம்மூட்டியோடு கைகோர்க்கும் சூர்யா.. விரைவில் வரப்போகும் சூப்பர் அப்டேட்!

vinoth

, வியாழன், 30 ஜனவரி 2025 (10:35 IST)
பெரிதும் நம்பிய ‘கங்குவா’ படம் சொதப்பியதால் இப்போது சூர்யா குறுகிய கால படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகிறது. தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘சூர்யா 45’ படத்தில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

அதற்கடுத்து லக்கி பாஸ்கர் இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சூர்யாவின் 47 ஆவது படத்தை மலையாள நடிகரும் இயக்குனருமான பசில் ஜோசப் இயக்க உள்ளதாக தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது. இது ஒரு சூப்பர் ஹீரோ படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

பசில் ஜோசப் ஏற்கனவே இயக்கிய மின்னல் முரளி என்ற சூப்பர் ஹிட் படம் பேய் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படம் இப்போது உடனடியாக தொடங்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தை பிரபல நடிகர் மம்மூட்டியின் ‘மம்மூட்டி கம்பெனி’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ஒரு காதல் கதை… மணிரத்னத்தின் அடுத்த பட அப்டேட்!