Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குவா படத்துத் தடைவிதிக்கக் கோரி நடந்த வழக்கும்…நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு!

vinoth
சனி, 9 நவம்பர் 2024 (10:35 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக உள்ளது கங்குவா திரைப்படம். இந்த  படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் அடுத்தவாரம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.

இந்நிலையில் இந்த படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பெற்றக் கடன் தொகையை திருப்பித் தராததால் கங்குவா படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், பல திரைப்பட தயாரிப்புக்கு வாங்கிய தங்களிடம் ரூ.99.22 கோடியில் மீதமுள்ள ரூ.55 கோடியை திரும்ப வழங்காததால், கங்குவா படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்குத் தரவேண்டிய தொகையை திருப்பி செலுத்தியதால் கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments