Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறைவன்‌ மடியில்‌ அந்த நல்ல ஆத்மா அமைதி கொள்ளட்டும்: சிம்புவின் இரங்கல் அறிக்கை

இறைவன்‌ மடியில்‌ அந்த நல்ல ஆத்மா அமைதி கொள்ளட்டும்: சிம்புவின் இரங்கல் அறிக்கை
, வியாழன், 1 அக்டோபர் 2020 (13:07 IST)
விக்ரம் நடித்த ’கிங்’, தனுஷ் நடித்த ’திருடா திருடி’, சிம்பு நடித்த ’மன்மதன்’, விவேக் நடித்த ’சொல்லி அடிப்பேன்’, உள்பட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் நேற்று இரவு 10.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறவிருக்கும் நிலையில் கோலிவுட் திரையுலகினர் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் நடிகர் சிம்பு தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மறைவிற்கு வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம்‌. "மன்மதன்‌" படம்‌ என்‌ வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களைக்‌ கொண்டது.
 
என்‌ மீது மிகுந்த அன்பு கொண்டவர்‌ திரு. கிருஷ்ணகாந்த்‌ அவர்கள்‌. "மன்மதன்‌" படத்தை என்‌ மீது நம்பிக்கை வைத்து இயக்கச்‌ சொன்னவர்‌. நீங்க ஸ்கிரிப்ட்‌ பண்ணுங்க. இயக்குங்க என உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல்‌ தனிப்பட்ட முறையில்‌ என்‌ மீது மிகுந்த எதிர்பார்ப்பைக்‌ கொண்ட நல்ல மனிதர்‌. அவரது மரணம்‌ அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 
 
கலங்க வைக்கிறது. அவரது இழப்பினால்‌ வாடும்‌ குடும்பத்தினருக்கு ஆறுதல்களைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இறைவன்‌ மடியில்‌ அந்த நல்ல ஆத்மா அமைதி கொள்ளட்டும்‌. 
 
இவ்வாறு சிம்பு தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் வாழ்க்கையை மாற்றிய நாள்… 20 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படத்தைப் பகிர்ந்த த்ரிஷா!