Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அயலான் இயக்குனரின் இயக்கத்தில் சூரி… தயாரிக்கும் முன்னணி நிறுவனம்!

Advertiesment
சூர்யா

vinoth

, புதன், 29 அக்டோபர் 2025 (08:06 IST)
தமிழ் திரையுலகின் முதல்  முழுநீள டைம் மிஷின் திரைப்படமான 'இன்று நேற்று நாளை' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் ரவிக்குமார் அதையடுத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் உருவாக்கிய அயலான் படம் கடந்த ஆண்டு ரிலீஸானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதையடுத்து அவரது அடுத்த படத்தைத் தொடங்குவதில் சிக்கல் உருவானது. அவர் அடுத்து சூர்யா, கார்த்தி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருக்குக் கதை சொன்னார். ஆனால் அந்த கதைகள் அடுத்தகட்டம் நோக்கி நகரவில்லை. இந்நிலையில் அவர் சூரியை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியானது.

சூரி தற்போது ‘மண்டாடி’ படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தை முடித்ததும் ரவிகுமார் படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ரவிகுமாரின் முந்தையப் படங்களைப் போலவே இந்த படமும் அறிவியல் புனைகதை படமாகவே உருவாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’மாரி நீதான் அந்த பைசன்..’ – படம் பார்த்துப் பாராட்டிய மணிரத்னம்!