Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம் ஜி ஆருக்கு அப்புறம் நாங்கதான்… அயலான் படம் பற்றி மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்!

எம் ஜி ஆருக்கு அப்புறம் நாங்கதான்… அயலான் படம் பற்றி மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்!
, சனி, 7 அக்டோபர் 2023 (11:06 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. முன்னர் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மேலும் சில மாதங்கள் தள்ளி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா சென்னையில் நடைபெற்ற்து. அப்போது சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். அப்போது பேசிய படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் “இந்த படத்தில் நான் பூஜ்ய ரூபாய் சம்பளத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைகள் காரணமாக” எனக் கூறியுள்ளார்.

மேலும் அயலான் படம் பற்றி பேசிய அவர் “இதுவரை தமிழில் அயலான் போன்ற ஜானரில் படங்கள் வந்ததில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னர் எம் ஜி ஆர் சார் நடிப்பில் இதுபோல ஒரு படம் வந்துள்ளதாக சொன்னார்கள். அதுக்கப்புறம் இப்போதான் வருது. அதுக்காக எம் ஜி ஆருக்கு அப்புறம் சிவகார்த்திகேயன்தான் என எழுதிவிடாதீர்கள்” என ஜாலியாக பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யோகி பாபுவுக்கு அம்மாவாக சித்தாரா நடிக்கும் ‘சன்னிதானம் பி ஓ’!