Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயன் சமூகவலைதளத்தில் எடுத்த திடீர் முடிவு!

சிவகார்த்திகேயன் சமூகவலைதளத்தில் எடுத்த திடீர் முடிவு!
, புதன், 12 மே 2021 (11:27 IST)
சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ரிலிஸால் தயாரிப்பு நிறுவனத்துக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில் தேர்தல் காரணமாக ரம்ஜான் பண்டிகையான மே 14 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை அனுமதி, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு எனப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் டாக்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வது மிகப்பெரிய சிக்கலாகியுள்ளது. அதனால் ஓடிடி ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை ஓடிடியில் தள்ளிவிடலாம் என்று தயாரிப்பாளரும் காத்திருந்து தியேட்டரில் ரிலீஸ் செய்யலாம் என சொல்கிறாராம். இது சம்மந்தமாக இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும், அதனால் சமூகவலைதளங்களில் கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை பின் தொடர்வதை நிறுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மௌனி ராயின் புதிய கவர்ச்சி புகைப்படம்… இணையத்தில் வைரல்!