Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறுதிகட்ட ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’!

Advertiesment
சூர்யா

vinoth

, திங்கள், 29 செப்டம்பர் 2025 (16:03 IST)
சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா ஆகியோர் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் சார்பில் ‘பராசக்தி’ திரைப்படம் உருவாகி வருகிறது.  முதலில் தமிழ்நாட்டின் பல இடங்களில் நடந்த படப்பிடிப்பு கடைசியாக இலங்கையில்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. ‘பராசக்தி’ திரைப்படம் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தோடு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும்  என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் அமலாக்கத்துறையின் சோதனையிட்ட நிலையில் அவர் தயாரித்து வந்த ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்கில் சிறு தாமதம் ஏற்பட்டது. ஆனால் இப்போது பிரச்சனைகள் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது சென்னையை அடுத்த ஸ்டுடியோ ஒன்றில் படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு  வருகிறதாம். தீபாவளி வரை படப்பிடிப்பு நடக்கவுள்ளதாகவும் அதோடு மொத்தக் காட்சிகளும் படமாக்கப்பட்டு முடியவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுந்தர் சி & கார்த்தி இணையவிருந்த படம் கைவிடப்பட்டதா?