Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன்- முருகதாஸ் படத்தின் ஷூட்டிங்கில் தாமதம்… பின்னணி என்ன?

vinoth
வியாழன், 24 ஏப்ரல் 2025 (11:18 IST)
தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் சல்மான் கானை வைத்து இயக்கிய ‘சிக்கந்தர்’ திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் வித்யுத் ஜம்மால், விக்ராந்த் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. இறுதிகட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருவதால் அந்த படத்தின் கெட்டப்பில் இருந்து மீண்டும் தாடி வளர்த்து ‘மதராஸி’ கெட்டப்புக்கு மாற வேண்டியுள்ளதால் ஷூட்டிங் தாமதமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தொலைஞ்சது சனியன்.. சூப்பர் சிங்கரை விட்டு வெளியேறிய பிரியங்கா குறித்து நெட்டிசன்கள் ரியாக்சன்..!

‘ரெட்ரோ’ சூர்யாவுகாக எழுதிய கதை இல்லை: மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்..!

40 கல்யாணம் கூட பண்ணுவேன், ஆனால் இன்னும் 4ஐ கூட தொடலை.. வனிதா விஜயகுமார்..!

எதிர்பார்ப்புகளை உருவாக்கிய சூர்யாவின் ‘ரெட்ரோ’… முன்பதிவு தேதி அறிவிப்பு!

ஹீரோவாக அறிமுகம் ஆகும் ‘ஸ்டார்’ பட இயக்குனர் இளன்!

அடுத்த கட்டுரையில்
Show comments