Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பராசக்தி படத்தின் ஷூட்டிங்குக்கு செல்லாத ஒளிப்பதிவாளர்… காரணம் என்ன?

Advertiesment
சூர்யா

vinoth

, செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (15:06 IST)
சூர்யா நடிப்பில் உருவாக இருந்து கைவிடப்பட்ட புறநானூறு கதையை இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ’பராசக்தி’ என்ற பெயரில் டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்கி வருகிறார். அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகி வருகிறது. படத்தில் முக்கிய வேடங்களில் ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தற்போது இலங்கையில்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு முன்னோட்ட வீடியோவும் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கவனம் பெற்றது.

சிதம்பரம், மதுரை மற்றும் இலங்கை என விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்த நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடைசியாக நடந்த ஷூட்டிங்கில் ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் பங்கேற்கவில்லை என சொல்லப்பட்டது. அதற்குக் காரணம் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதுதான் என சொல்லப்படுகிறது. ரவி கே சந்திரனுக்கு நெஞ்சுவலி வந்து அதற்காக சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’வல்லரசு’ படத்தை அடுத்து விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’ ரீரிலீஸ்.. சூப்பர் அறிவிப்பு..!