Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவகார்த்திகேயன்- முருகதாஸ் படத்தின் ஷூட்டிங்கில் தாமதம்… பின்னணி என்ன?

Advertiesment
சிவகார்த்திகேயன்

vinoth

, வியாழன், 24 ஏப்ரல் 2025 (11:18 IST)
தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் சல்மான் கானை வைத்து இயக்கிய ‘சிக்கந்தர்’ திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் வித்யுத் ஜம்மால், விக்ராந்த் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. இறுதிகட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருவதால் அந்த படத்தின் கெட்டப்பில் இருந்து மீண்டும் தாடி வளர்த்து ‘மதராஸி’ கெட்டப்புக்கு மாற வேண்டியுள்ளதால் ஷூட்டிங் தாமதமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா 46 படத்தில் இவர்தான் கதாநாயகியா?... அதிரடியாக நடந்த மாற்றம்!