தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் வித்யுத் ஜம்மால், விக்ராந்த் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 70 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. கடைசி கட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. படம் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது ரஜினிகாந்தின் கூலி படக்குழுவினர் அந்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால் மதராஸி படத்தின் ரிலீஸில் மாற்றம் இருக்கும் என சொல்லப்படுகிறது. மதராஸி திரைப்படம் ஜூலை மாதமே ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.