Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்பு 49 படத்தின் ஷூட்டிங் இந்த வெளிநாட்டில்தான் நடக்க உள்ளதா?

Advertiesment
சிம்பு 49 படத்தின் ஷூட்டிங் இந்த வெளிநாட்டில்தான் நடக்க உள்ளதா?

vinoth

, சனி, 15 மார்ச் 2025 (14:21 IST)
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘பத்து தல’ . அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் அவர் கமல்ஹாசனோடு இணைந்து மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உருவாகும் அவரது 49 ஆவது படம், சிம்பு- தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அவரது 50 ஆவது படம் மற்றும் சிம்பு –அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் அவரது 51 ஆவது படம் என மூன்று அறிவிப்புகள் வெளியாகின.

இதில் முதலில் ‘சிம்பு 49’ படம் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் படத்தின் திரைக்கதையை இயக்குனர் இறுதி செய்யாததால் படம் மே மாதத்தில்தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் ஷூட்டிங் துபாயில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷ்ணு விஷால் & ராம்குமார் இணையும் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!