Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தயாரிப்பாளரை மாற்றி மறுபடி தொடங்கும் படம்… கௌதம் கார்த்திக்கு திருப்புமுனையாக அமையுமா?

தயாரிப்பாளரை மாற்றி மறுபடி தொடங்கும் படம்… கௌதம் கார்த்திக்கு திருப்புமுனையாக அமையுமா?
, வியாழன், 29 ஜூலை 2021 (16:10 IST)
தயாரிப்பாளரை மாற்றி சிப்பாய் படத்தை முழுவதும் எடுத்து முடித்து ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.

கௌதம் கார்த்திக்கின் இரண்டாவது படமாக வெளியாக வேண்டியது சிப்பாய் திரைப்படம். அந்த படத்தில் அவரும் லஷ்மி மேனனும் நடிக்க சிலம்பாட்டம் புகழ் இயக்குனர் சரவணன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து டிரைலர் எல்லாம் ரிலீஸ் ஆனது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகளால் அந்த படம் ரிலீஸாகவில்லை. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இந்த திரைப்படம் இந்த திரைப்படம் ஓடிடி ரிலிஸூக்கு தயாராகிறதாம். கொரோனா லாக்டவுன் முடிந்துள்ள நிலையில் சில காட்சிகள் மட்டும் படமாக்கி விட்டு ஓடிடியில் ரிலிஸாக உள்ளதாம்.

மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளரும் மாறி புதிய தயாரிப்பாளர் ஒருவர் படத்தை எடுத்துக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீரியல் நடிகர் வேணு அரவிந்த் தொடர்ந்து கவலைக்கிடம்!