Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிடைக்கும் வாய்ப்புகளில் திறமையைக் காட்டவே விரும்புகிறேன் – யோகி பாபு!

கிடைக்கும் வாய்ப்புகளில் திறமையைக் காட்டவே விரும்புகிறேன் – யோகி பாபு!
, வியாழன், 29 ஜூலை 2021 (15:08 IST)
தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கும் யோகி பாபு நவரசா ஆந்தாலஜியில் சம்மர் ஆஃப் 92 என்ற படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் யோகிபாபு தமிழில் இப்போது அதிக சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகராக இருக்கிறார். இந்நிலையில் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக உருவாகும் நவரசா ஆந்தாலஜியில் சம்மர் ஆஃப் 92 என்ற நகைச்சுவைக் கதையில் நடித்துள்ளார்.

அதுபற்றி பேசியுள்ள அவர் ‘எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எனது திறமையைக் காட்டவே விரும்புகிறேன். தமிழ் சினிமாவின் மூத்த நகைச்சுவை நடிகர்கள் நகைச்சுவை மட்டும் இல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளனர். ஒரு படத்தில் ஒரு கனமான பாத்திரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தி, நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தொடங்கிய ஹரி & அருண் விஜய் திரைப்படம்!