Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் தொடங்கிய ஹரி & அருண் விஜய் திரைப்படம்!

மீண்டும் தொடங்கிய ஹரி & அருண் விஜய் திரைப்படம்!
, வியாழன், 29 ஜூலை 2021 (15:02 IST)
அருண் விஜய் நடிப்பில் ஹரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

நீண்டநாள் கழித்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் அவரது மைத்துனரும்,நடிகருமான  அருண்விஜய் ஒரு ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படம் அருண்விஜய்க்கு 33வது படம். அதேபோல் ஹரிக்கு இந்த படம் 16 வது படமாகும்.  இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக  பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும், ராதிகா, பிரகாஷ்ராஜ், புகழ், அம்மு அபிராமி, ஜெயபாலன், உள்பட பலர் நடிக்க உள்ளனர்.

கிராமத்துக் கதையான இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது பழனியில் தொடங்கி இரு நாட்களில் படக்குழுவில் ஒருவருக்குக் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இயக்குனர் ஹரிக்கும் உடல்நிலை நலிவடைந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா இரண்டாம் அலையால் படப்பிடிப்பு கைவிடப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெருமைப்பட வேண்டிய படைப்பு: ’சார்பாட்டா பரம்பரை’ குறித்து சிவகார்த்திகேயன்!