சிம்பு நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு, இது குறித்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிம்புவின் 49-வது படமாக உருவாக இருக்கும் இந்த படம், 'வடசென்னை டான்' கதை என்றும், இந்த படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பது மட்டுமின்றி, இயக்குனர் நெல்சன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தில் சிம்பு ரவுடி கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் கதை 'ராஜன் வகையறா' என்று கூறப்படும் நிலையில், இந்த படம் குறித்த மேலும் சில முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.