Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசியல் கட்சி முடிவில் பின்வாங்கல்… எஸ் ஏ சியின் மனமாற்றத்துக்கு காரணம் இவர்தானாம்!

அரசியல் கட்சி முடிவில் பின்வாங்கல்… எஸ் ஏ சியின் மனமாற்றத்துக்கு காரணம் இவர்தானாம்!
, வெள்ளி, 4 டிசம்பர் 2020 (11:21 IST)
விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஆரம்பிக்க இருந்த கட்சி குறித்த முடிவில் அவர் பின் வாங்கியதற்கு விஜய்யின் தாயார் ஷோபாதான் காரணமாம்.

சில நாட்கள் முன்னதாக நடிகர் விஜய் பெயரில் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய அரசியல் கட்சி தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனக்கும் அந்த கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று விஜய் அறிவித்தார். தொடர்ந்து விஜய்யின் தாயார் ஷோபா கட்சி பதவியிலிருந்து விலகிய நிலையில், கட்சி தலைவராக அறிவிக்கப்பட்ட ஏ.கே.ராஜாவும் பதவி விலகினார்.

இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் நடிகர் விஜய் பெயரில் தொடங்கப்பட்ட கட்சி மீது விஜய்க்கு அதிருப்தி உள்ளதால் கட்சியின் பெயரை பதிவு செய்ய வேண்டாம் என கடிதம் எழுதியதாக சொல்லப்பட்டது.

எஸ் ஏ சியின் மனமாற்றத்துக்கு விஜய்யின் தாயார் ஷோபாதான் காரணம் என சொல்லப்படுகிறது. எஸ் ஏ சியின் செயல்களால் கடுமையாக அதிருப்தியடைந்த ஷோபா அழுத்தம் கொடுத்து எஸ் ஏ சியிடம் பேசிய பின்னர்தான் அவர் தனது முடிவில் இருந்து பின்வாங்கியதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாத்ததான் கடைசி படமா? ரஜினியின் முடிவு என்ன?