Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அது விஜய்க்கு எழுதிய கதையா? ஷங்கர் ராம்சரண் படத்தின் அப்டேட்!

அது விஜய்க்கு எழுதிய கதையா? ஷங்கர் ராம்சரண் படத்தின் அப்டேட்!
, வெள்ளி, 28 மே 2021 (16:10 IST)
விஜய்க்காக எழுதிய கதைதான் இப்போது ராம்சரண் தேஜா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படம் த மிழ் உள்பட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

இந்த படத்தை பற்றி இப்போது மற்றொரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் ஷங்கர் இந்த கதையை விஜய்யை மனதில் வைத்துதான் உருவாக்கினாராம். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலைகளில் விஜய்யை வைத்து அந்த படத்தை இயக்க முடியாது என முடிவெடுத்துதான் ராம்சரணை வைத்து அந்த படத்தை இயக்க உள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் 5-க்கும் கமல் தான் அம்பையர் - சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?