Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறையில் மகனை சென்று சந்தித்த ஷாருக் கான்!

சிறையில் மகனை சென்று சந்தித்த ஷாருக் கான்!
, வியாழன், 21 அக்டோபர் 2021 (11:03 IST)
போதைப் பொருள் வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் ஆர்யன் கானை ஷாருக் கான் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 7 பேர் சொகுசுக் கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது அவர்கள் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆர்யன் கானுக்கு அவர் தந்தை சார்பாக வீட்டில் இருந்து உணவு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சிறை நிர்வாகம் அதை மறுத்தது. இந்நிலையில் சிறையில் உள்ள காண்டீனில் பொருட்கள் வாங்கிக் கொள்ள சிறைவிதிகளின் படி 4500 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பியுள்ளார். மேலும் வீடியோ கால் மூலமாகவும் குடும்பத்தினருடன் ஆர்யன் கான் பேசியுள்ளாராம்.

இந்நிலையில் மும்பை மத்திய சிறையில் இருக்கும் ஆர்யன் கானை ஷாருக் கான் நேரில் சென்று சந்தித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் கர்ணன் படத்துக்கு விருது!