Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாணிக்காயிதம் டப்பிங் பணிகளை முடித்த செல்வராகவன்!

சாணிக்காயிதம் டப்பிங் பணிகளை முடித்த செல்வராகவன்!
, திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (10:59 IST)
சாணிக்காயிதம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இயக்குனர் செல்வராகவனும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தபோது கொரோனா இரண்டாவது அலை வந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து பின்னர் மீண்டும் தொடங்கி முடிந்துள்ளது..

இப்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்த படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஓடிடி வெளியீட்டுக்கு முயற்சி நடக்கிறது. இப்போது அமேசான் ப்ரைமுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இந்நிலையில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வரும் இயக்குனர் செலவராகவன் சாணிக்காயிதம் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலில் ஹிரோ… அப்புறம் காமெடியன்… வடிவேலுவின் பலே திட்டம்!