Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவரோடு வந்து படப்பிடிப்பை முடித்துக் கொடுத்த பிரகாஷ்ராஜ்!

மருத்துவரோடு வந்து படப்பிடிப்பை முடித்துக் கொடுத்த பிரகாஷ்ராஜ்!
, திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (10:29 IST)
நடிகர் பிரகாஷ்ராஜ் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பின்போது தோள் பட்டையில் அடிபட்டு காயமடைந்தார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் தென்னிந்திய மொழிகளில் மறுபடியும் பிஸியான நடிகராக வலம் வர ஆரம்பித்துள்ளார். இப்போது தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை கோவளத்தில் தங்கி இருந்தார். அப்போது அவர் வீட்டில் தவறி விழுந்ததில் தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஐதராபாத் சென்றுள்ளார். இதை அவரே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அங்கு அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து பிரகாஷ் ராஜ் தனது புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தன்னால் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுவிட்டதால் தனது மருத்துவ நிபுணரோடு வந்து படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து சென்றுள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டு ஓடிடி பக்கம் ஒதுங்கிய இயக்குனர்!