Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதலில் ஹிரோ… அப்புறம் காமெடியன்… வடிவேலுவின் பலே திட்டம்!

முதலில் ஹிரோ… அப்புறம் காமெடியன்… வடிவேலுவின் பலே திட்டம்!
, திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (10:49 IST)
நடிகர் வடிவேலு மீதான ரெட் நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவருகிறார்.

வடிவேலு சிம்புதேவன் காம்போவின் ஹிட் காம்போவான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டனர். படத்தின் போஸ்டர் வெளியாகி சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் வடிவேலுவுக்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஒரு கட்டத்தில் படமும் கைவிடப்பட்டது. இதனால் லைகா நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு வடிவேலு ஈடு செய்யவேண்டும் என்று அவருக்கு ரெட் விதிக்கப்பட்டது.  இப்போது அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து சூட்டோடு சூடாக வடிவேலு தன்னுடைய முத்திரைக் கதாபாத்திரமான நாய்சேகர் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். அதன் பின்னர் மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துவிட்டு பின்னர் வரிசையாக காமெடியன் வேடங்களில் நடிக்க உள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜி வி பிரகாஷுக்கு விருதுகளும் வாழ்த்துகளும் உண்டு… பாராட்டித் தள்ளிய இயக்குனர்!