Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ஞானவேல்: ’ஜெய்பீம்’ விவகாரம் குறித்து சீமான்

சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ஞானவேல்: ’ஜெய்பீம்’ விவகாரம் குறித்து சீமான்
, திங்கள், 22 நவம்பர் 2021 (09:36 IST)
’ஜெய்பீம்’ விவகாரம் குறித்து கருத்து கூறிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சிக்கலுக்கு இயக்குனர் ஞானவேல் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என கூறியுள்ளார்
 
’ஜெய்பீம்’ விவகாரம் குறித்து இயக்குனர் ஞானவேல் நேற்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சூர்யாவுக்கும் இந்த பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இந்த பிரச்சனை சம்பந்தமாக முழு பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் ’ஜெய்பீம்’ படம் குறித்தான தம்பிக்கு ஞானவேலின் கடிதம் கண்டேன் என்றும் தாமதமாக வந்தாலும் மிகச்சரியாக தனது தரப்பு விளக்கத்தை அளித்து இந்த சிக்கலுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்றும் சீமான் தெரிவித்துள்ளார். சமூக பதட்டத்தையும் சச்சரவை தணிக்கும் விதமாக சமூக பொறுப்புணர்வோடு மிகுந்த முதிர்ச்சியோடு அணுகிய இம்முறை வரவேற்கத்தக்கது’ என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகத்திலேயே இங்குதான் முதல்முறை: ’மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி